வெற்றி பெற்றவர்களை கவனி!..
வெற்றி பெற்றவர்களை கவனி!...
உள்ளம் தூய்மையானால் உலகமும் தூயதாகிவிடும். இந்த உண்மையை உலகுக்கு கூற வேண்டிய அவசியம், முன்பு என்றும் இல்லாத அளவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
நாம் முன்னேற முதலில் நம்மிடம் நம்பிக்கை வேண்டும்; பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் கடவுளிடமும் நம்பிக்கை வைக்க முடியாது.
உள்ளத்துக்குள் இருக்கும் அனைத்தையும் துறந்துவிடு, வைராக்கியத்தைக் கடைபிடி, இதுவே உண்மையான தியாகம். இது இல்லாமல் உனக்கு ஆன்மிகம் கிடையாது.
கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்கு கொடுத்திருக்கின்ற அனைத்தும், பிறருக்குக் கொடுப்பதற்குத் தான்.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களைக் கவனி. ஒவ்வொருவரின் பின்னணியிலும், அளவற்ற கடமையுணர்வும், நேர்மையும் இருந்தே தீரும்.
- விவேகானந்தர்
No comments:
Post a Comment